தாய் புறாவிடம் குஞ்சு புறா கேட்டது,,,,


கோவிலில் இருந்தோம்,
திருவிழா என்று நம்மை விரட்டி விட்டனர்.!!!


நாகூரில் இருந்தோம்,
அங்கேயும் வெள்ளை அடிப்பதாக சொல்லி விரட்டி விட்டனர்.!!!

வேளாங்கண்ணியிலும்
திருவிழா பெயரை சொல்லி துரத்தி விட்டனர்.!!!

ஆனால் ஒரு சந்தேகம் அம்மா...

நாகூருக்கு வருபவர்களை முஸ்லிம்கள் என்றும்,
கோவிலுக்கு வருபவர்களை ஹிந்துக்கள் என்றும், வேளாங்கண்ணிக்கு வருபவர்களை கிறஸ்தவர்கள் என்றும் அழைக்கிறார்கள்.

ஆனால் நாம் எங்கு சென்றாலும் நம்மை
மட்டும் ஏனம்மா
''புறா'' என்றே அழைக்கின்றனர் ???

தாய் புறா:
அதனால் தான் அவர்கள் கீழேயே வசிக்கிறார்கள்,
நாம் மேலேயே வசிக்கிறோம்......!!!