நான் நாட்டு கட்டையா இல்லை நான் ஒரு ஊமை



ஒரு பொண்ணு பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தது. அதே பஸ் ஸ்டாப்பில் 2 இளைஞர்களும் நின்றார்கள்.இந்த இரண்டு பேரும் அந்த பெண்ணைவிட்டு கொஞ்சம் தள்ளியே நின்றார்கள்.சிறிது நேரம் கழித்து அந்த பஸ் ஸ்டாப்புக்கு வேறொரு பையன் வந்தான்.அவன் அந்த பெண்ணின் அருகே நின்றான்.இவள் தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தாள்.சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் காதில் "செம கட்டை....நாட்டு கட்டை" என்று சப்தம் கேட்டது.இதை கேட்ட அந்த பெண் கோபத்தில் தன் அருகே நின்ற பையனின் கண்ணத்தில் ஓங்கி அறைந்துவிட்டு ''நான் உனக்கு நாட்டு கட்டையா என்று கேட்டாள்''.
பிறகு அவனை அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டினாள்.எதுவுமே சொல்லாத அந்த பையன்,சிறு புண்ணகையுடன் ஒரு பேப்பரில் எதையோ எழுதி,அந்த பெண்ணிடம் கொடுத்தான்.அதை கோபத்துடன் வாங்கி படித்தாள் அந்த பெண்.அதை படித்த பின் ஒரு சில நிமிடத்தில் அழுதுவிட்டாள்.

அந்த பேப்பரில்,,,
"அன்பு தங்கையே,உனது அண்ணனாகிய எனக்கு,பிறவியிலிருந்தே பேச்சு வராது.
நான் ஒரு ஊமை மா"
என்று எழுதியிருந்தது......
‪நீதி‬
வேற ஒருவன் செய்த தவறுக்கு, தங்கை என்று நினைத்த வாய் பேசாத பையனுக்கு அடியா????