வட கிழக்கு அனல் மின் நிலையங்களுக்கு கங்கை வழியாக நிலக்கரி


வட கிழக்குப் பிராந்தியத் தில் அமைந்துள்ள 21 அனல் மின் நிலையங்களுக்கு கங்கை நதி வழியாக நிலக்கரி கொண்டு செல்லும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளது.

இந்திய நீர்நிலைகளில் 15,544 கி.மீட்டர் நீளமுடைய வழிகள் போக்குவரத்துக்கு ஏற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் தற்போது 5,700 கி.மீட்டரில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது.

அதன்படி வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் அலகாபாத் முதல் ஹால்டா வரை அமைந்துள்ள 21 அனல் மின் நிலையங்களுக்கு கங்கை நதி வழியாக நிலக்கரியை கொண்டு செல்ல நீர்வழிப் போக்கு வரத்து ஆணையம் புதிய திட்டத்தை தயாரித்துள்ளது.

அலகாபாத் முதல் ஹால்டா வரையில் தற்போது 11 அனல் மின் நிலையங்கள் செயல்படுகின்றன. இன்னும் 6 ஆண்டுகளில் மேலும் 10 அனல் மின் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன. அனைத்து அனல் மின் நிலையங்களும் கங்கை நீர் வழித்தடம் மூலம் நிலக்கரி எடுத்துச் செல்லப் படும்