கவியரசு கண்ணதாசன் வரிகள்

தாய் பசித்திருக்கும்போது
தாரத்திற்கு சோறூட்டாதே;
நீ பசித்திருக்கும்போது
உன் பிள்ளைகள்
அதே வேலையைச்செய்துகொண்டிருப்பார்கள்.


உடம்பை ஒழுங்காய் வைத்திருப்பவனை
மரணம் நெருங்குகிறது;
உடம்பை கெடுத்துக்கொண்டவன்
மரணத்தை நெருங்குகிறான்.

இன்ன ஓவியத்தை வரையப்போகிறோமென்று
முடிவுகட்டிக்கொண்டு தூரிகையை
எடுப்பவன்பெயர் ஓவியன்.
'மையை ஊற்றுவோம்-அது
எப்படிவேண்டுமானாலும் விழட்டும்;
அதுவே ஓவியம்'
என்று முடிவுகட்டுவோன்பெயர் அரசியல்வாதி.

ஆணவமும் அழிவும் இரட்டைக்குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்.
அவ்வளவுதான்.