தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்......!

"அறிவியலற்ற மொழி தமிழ்.அதை கற்று என்ன லாபம்....?" என்று இன எதிரிகள் பரப்பியதை நாமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்....

எடுத்துக்காட்டாக பல் துலக்கும் வேப்பங்குச்சி, "ஆலம் விழுது" ஆகியவை பத்தாம்பசலித்தனமானவை என்ற கருத்து நிலைநாட்டப்பட்டு "ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என்ற பழமொழி மூடநம்பிக்கை வரிசையில் வைக்கப்பட்டு.அறிவு என்ற வலயத்திற்கு வெளியே வைக்கப்பட்டது.

ஆனால் அதுவே "நீம் டூத் பேஸ்ட்", "ஹெர்பல் டூத் பேஸ்ட்" என்று பெரிய பன்னாட்டு பெருமுதலாளி நிறுவனங்களின் [பற்பசையாக வருகிற போது கேள்விமுறையின்றி ஏற்கப்படுகிறது.

"பூண்டு ரசம்", "பூண்டு துவையல்" என்ற தமிழர்களின் உணவுமுறை ஒதுக்கப்பட்டு பத்தாம்பசலித்தனமானது என்று ஒதுக்கப்பட்டு அதுவே,

"கார்லிக் பெர்ல்ஸ்" என்ற ஆங்கில பெயரில் உறை மாத்திர என்ற மருந்து வடிவம் பெற்ற பிறகு நவீன கண்டுபிடிப்பாக ஏற்கப்படுகிறது.

நம் பாரம்பரிய அறிவை நம்மிடமே திருடி, நம்மிடமே எப்படி விற்கிறார்கள்.

தமிழ்ச் சமூகம் அறிவுச் சமூகம் தான் என்று உணர வரலாற்று அறிவு முகாமையானது.அதற்கு தேவை நம் முன்னோர்களின் வாழ்வை தேடி அறிவது.
தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்......!


நன்றி : கி.வெங்கட்ராமன் அய்யா, தமிழ்த் தேசியப் பேரியக்கம்.