2014 நோபல் பரிசு


நோபல் பரிசு - 2014

மருத்துவம் / உடற்கூறியல் :-
'மூளையின் வழிகாட்டு அமைப்பை உருவாக்கும் உயிரணுக்கள் குறித்த கண்டுபிடிப்புக்காக'; அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் ஓ’கீஃபே மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ தம்பதியரான மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ. மோசர் ஆகியோருக்கும்

இயற்பியல் :-
'ஆற்றல் திறன் படைத்த வெண்மை ஒளியை புதிய வழியில் உருவாக்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நீல ஒளி-உமிழ்வு டயோடுகளை கண்டுபிடித்ததற்காக'; ஜப்பான் விஞ்ஞானிகள் இசமு அகாசாகி, ஹிரோஷி அமானோ மற்றும் அமெரிக்க வாழ் ஜப்பானிய விஞ்ஞானி ஷுஜி நகமுரா ஆகியோருக்கும்
வேதியியல் :-
'உயர்தெளிவு ஒளி நுண்ணோக்கி உருவாக்கியதற்காக'; அமெரிக்க விஞ்ஞானிகள் எரிக் பெட்ஸிக், வில்லியம் மோர்னர் மற்றும் ஜெர்மன் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹெல் ஆகியோருக்கும்
இலக்கியம் :-
'நினைவின் கலையைக் கொண்டு அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள இயலாத மானுட சூழ்நிலைகளை சித்திரப்படுத்தியதற்காகவும், பிரான்ஸ் நாட்டை ஜெர்மனியின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்தக் காலக்கட்டத்தின் வாழ்வுலகத்தை படைப்புப்பூர்வமாக வெளிப்படுத்தியதற்காகவும்'; பிரெஞ்சு எழுத்தாளர் பாட்ரிக் மோதியானோ அவர்களுக்கும்
அமைதிக்கான நோபல் பரிசு :-
'சிறார் மற்றும் இளைஞர் பாதுகாப்புக்கும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் பாடுபட்டதற்காக'; இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் ஆகியோருக்கும் நோபல் பரிசினை வழங்குவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.