சிந்தனை துளிகள்.....

  •   உங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது
  •  உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும். அது நிரந்தரமாக நின்றுபோனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள். 
  •  நீங்களாக நின்றுவிடும்போதுதான் வெற்றியோ வளர்ச்சியோ நின்றுபோகிறது. 
  • ஒரு சிக்கலில் இருந்து நீங்கள் தப்பிக்க நல்ல வழி, அதைத் தீர்ப்பதுதான்! 
  • பயன்படும் விதமாக வடிவமெடுக்கும் வரையிலும், பகிர்ந்து கொடுக்கும் வரையிலும் நீங்கள் கொண்டிருக்கும் எந்தத் திறமையும் பயனற்றதுதான். 
  • வாழ்க்கையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விசித்திர ரகசியம் என்ன தெரியுமா? “எடுப்பவர்கள் இழக்கிறார்கள். கொடுப்பவர்களே பெறுகிறார்கள்”. 
  •   வெற்றி ஒரு கைக்குழந்தை. நீங்கள் சிரித்த முகத்துடன் இருந்தால், உங்களிடம் தாவிக்கொண்டு வருகிறது. 
  • ஒவ்வோர் ஒப்பந்தத்திலும் நீங்கள் தேட வேண்டியது, வாய்ப்பைத் தானே தவிர உத்திரவாதத்தை அல்ல!! 
  •   நீங்கள் ஒன்றைத் தொடங்காதவரை, சென்றடைவது எப்படி? 
  •  நீங்கள் வாழும் வாழ்விலேயே மிகவும் சுவாரசியமான காலகட்டம்… நிகழ்காலம்தான்!!