நாம் தினமும் பயன் படுத்தும் உப்பை பற்றி தகவல் தான் இந்த பதிப்பு ..

உப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என் பாட்டி சொல்வார்கள் . உப்பு நமக்கு உணவுகளில் சுவைகளை கூட்டி தரும் என்று மட்டும் நமக்கு தெரிந்த விவரம் ...

உப்பின் தன்மை என்ன ?
சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ? இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு... உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது

இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள் இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..

ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் . உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .

சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உன்ன பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...